திருச்சிராப்பள்ளி, ஏப்.21-
திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவி யர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் மே 1 முதல் 15 வரை 15 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளை யாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதில், தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளை கோல்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், இறகுபந்து, குத்துச்சண்டை, வூசு மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
எனவே, பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியிலும் 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.