திருச்சிராப்பள்ளி, ஜன. 29 - திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் தீர்மானிக்கப்பட்ட தினக் கூலி ரூ.557-ஐ வழங்க வேண்டும். தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந் தம் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் ஊர்வலம் வியாழனன்று திருச்சி மாநகராட்சி அலுவல கம் அருகிலிருந்து துவங்கி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வரை நடைபெற்றது. ஊர்வலத்திற்கு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஊர்வலத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள், பகுதி குழு செயலாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.