districts

பள்ளி மாணாக்கர்களுக்கு ஆளுமை பயிற்சிப் படிப்புகள்

தஞ்சாவூர், ஜூன் 3-  

    பள்ளிப் பருவ மாணாக்கர்கள் இளம் வயதிலேயே ஆளுமைத் திறன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் பெற்று நல்நிலையை எட்டிட உதவும் வகையில், படிநிலைப் படிப்புகளை நடத்த தமிழ் வளர் மையத்தின் வாயிலாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

   இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை, திருப்பூரில் உள்ள வெங்கடேசுவரா வித்யா மந்திர் பள்ளியுடன், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் வளர் மையம் மேற்கொண்டது.  

   நிகழ்வில் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், வெங்க டேசுவரா வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் செ.கதிரவன், பதிவாளர் (பொ) முனைவர் கோவைமணி, தமிழ் வளர் மைய இயக்குநர் முனை வர் இரா.குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையர் முனைவர் பெ. இளையாப் பிள்ளை, கண்காணிப்பாளர் முனைவர் பஞ்சநாதன், ஆட்சிக் குழுப்பிரிவு உதவியாளர் மு.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்