புதுக்கோட்டை, மே 20-
தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்ட னத்தைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘‘புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 9 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 4 பேர் மட்டுமே வேலை செய் கின்றனர். இந்நிலையில் கடந்த 15.05. 2023 அன்று 5-ஆம் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.சரஸ்வதி 6-ஆம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணி யாற்ற முடியாது என்பதைக்கூட கணக்கில் கொள்ளாமல் முறையற்ற காரணங்களை கூறி எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் க.மணிவண்ணன் மற்றும் சுகாதார அலு வலர் (பொறுப்பு) நா.கணேசன் ஆகியோரை ந.நி மண்டல இயக்குநரால் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை இவர் மீது எந்த குற்றச்சாட்டு களும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலின் பேரிலோ பணி யிடை நீக்கம் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத் தக்கது. எந்தவிதமான விளக்கமும் கேட்காமல் பணியிடை நீக்கம் செய்தது தவறான நடவ டிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன் மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டத்திற்கு திட்டமிடுவோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.