districts

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

மயிலாடுதுறை,  ஜூன் 23-

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை  சீரமைப்பு, பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம் படுத்தும் பணிகள் குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

     பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறி வுறுத்தினார். தொடர்ந்து திருக்கடை யூரில் உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டலை பார்வையிட்ட பின் செய்தி யாளர்களிடம் அமைச் சர் கூறுகையில், “மயிலாடு துறை மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்  குறித்து ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

     தரங்கம்பாடி யில் ரூ.3 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள்  விரைவில் தொடங்கப்பட வுள்ளது. பூம்புகாரில் ரூ.23  கோடியே 60 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. 6  மாதங்களில் பணிகள் முடிக் கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். திருக்கடை யூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. இதை முறையாக பராமரித் தால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார் கள்.  

     கடந்த ஆண்டு 6.60  லட்சம் சுற்றுலாப் பயணிகள்  மயிலாடுதுறை மாவட்டத் திற்கு வந்துள்ளனர். நிக ழாண்டில் (4 மாதங்களில்)  9.71 லட்சம் பேர் வந்துள்ள னர். தரங்கம்பாடியில் உள்ள கவர்னர் மாளிகையை 2024  இல் சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இங்கு  மேலும் பல்வேறு மேம்பாட் டுப் பணிகள் மேற்கொள்ளப் படும்” என்றார்.

     ஆய்வின்போது சுற்று லாத்துறை இயக்குநர் சந்தீப்  நந்நூரி, மாவட்ட சுற்றுலா  அலுவலர் அரவிந்த்குமார், சீர்காழி வருவாய் கோட்டாட் சியர் உ.அர்ச்சனா, தரங்கம் பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடனிருந்த னர்.