அரியலூர், ஆக.26 -
அரியலூர் மாவட்டம் கல்லங் குறிச்சி கிராமத்தில் கால்நடை களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடை பெற்றது.
முகாமை கல்லங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்த்தி சிவகுமார் தொடக்கி வைத்தார். அரியலூர் கால்நடை பராம ரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், அரியலூர் கோட்ட உதவி இயக்கு நர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், கடுகூர் கால்நடை உதவி மருத்து வர் குமார், கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்ட மருத்துவக் குழுவி னர் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியை செலுத்தினர். இதில் 193 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொ டர்ந்து, தோல் கழலை நோய் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.