மயிலாடுதுறை, மே 12-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள குட்டியாண்டி யூர் மீனவ கிராமத்தில் காரைக்கால் இந்திய கடலோர காவல் படை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக பயணம் செய்வது, விபத்தில் சிக்கி கொண்டால் பாதுகாப்பாக கரை திரும்புவது குறித்து மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.
இந்திய கடலோரக் காவல் படை அதிகாரி ஆர்.வி.சிங், கடலோர காவல் படை ஓய்வு பெற்ற ஆய்வாளர் காவல் கதிரேசன் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் இருந்து வானிலை, கடல் காற்றின் வேகம், அலையின் உயரம், மீன் கிடைக்கும் இடம், புயல் முன்னெச்சரிக்கை, மழை ஆகிய தகவல்களை பெற்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்களுக்கு தினந்தோறும் வழங்கி வருவதாகவும் மீனவர்கள் அதனை பயன்படுத்தி கடலில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அதன் திட்ட மேலாளர் மெய்கண்டன் அறி வுறுத்தினார். முகாமில் குட்டியாண்டியூர் மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.