தஞ்சாவூர், ஆக.27-
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் சொர்ணக்காட்டில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது.
இதில், சொர்ணக்காடு, படப்பனார் வயல், பட்டத் தூரணி ஆகிய பகுதிகளைச் சார்ந்த 300 பயனாளிகளுக்கு மா, கொய்யா, பப்பாளி, பலா, நெல்லி உள்ளிட்ட ஏழு வகையான பழ மரக்கன்றுகளை சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் வழங்கினார். இதில், அரசு மானியம் ரூ.150, விவசாயிகள் பங்குத்தொகை ரூ.50 என ரூ.200 மதிப்பிலான 7 மரக்கன்றுகள் ஒவ்வொரு பய னாளிக்கும் வழங்கப்பட்டது.