districts

நியாய விலைக் கடைகளுக்கு தரமான அரிசி அனுப்பப்படுகிறதா?

மயிலாடுதுறை, ஏப்.16 -  தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங் களில் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக புகார் வரப்பெற்றது.  இந்த புகாரின்படி அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர்களும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு களில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு தரமான அரிசி அனுப்பி வைக்கப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  அதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் கிருஷ்ணன் தரங்கம்பாடி வட்டத்திலுள்ள கிடாரம்கொண்டான் கிராமத் தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். அங்கி ருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசியின் தரம் குறித்தும், எடை அளவு குறித்து ஆய்வு செய்தார்.  மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 90 நியாய விலை கடைகளுக்கும் தரமான அரிசி அனுப்பி  வைத்திடவும், தட்டுப்பாடின்றி அத்தியா வசிய பொருட்களை நியாயவிலை கடை களுக்கு அனுப்பி வைத்திடவும், கிடங்கு தரக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு  உத்தரவிட்டார்.