திருச்சிராப்பள்ளி, மார்ச் 21 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் சிவ ராசு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா மாவட்ட ஆட்சியர் சிவ ராசுவிடம் கொடுத்த மனு வில், திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதிக்கு வந்து செல்லும் பேருந்துகள், வேன்களுக்கு நுழைவு கட்ட ணம் வசூல் செய்ய டெண்டர் விடுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் பார்க்கிங் வசதி கிடையாது. ஸ்ரீரங்கத்திற்கு வரும் வாக னங்கள் ஆங்காங்கே சாலை யோரம் நிறுத்தும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஸ்ரீரங்கம் பகுதியில் ஒருங்கிணைந்த பார்க்கிங் வசதி செய்து விட்டு நுழைவு கட்டண வசூல் டெண்டர் விடுமாறும், அதுவரை பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு டெண்டர் விடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இதேபோன்று மாநக ராட்சியில் நடைபெற்ற குறை தீர் நாள் கூட்டத்தில் மேயரி டம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுக்களை கொடுத்த போது பகுதிகுழு உறுப்பினர் ரகுபதி, கிளைச் செயலா ளர்கள் சுரேஷ், கிருஷ்ண மூர்த்தி, செல்லமுத்து ஆகி யோர் உடனிருந்தனர்.