districts

img

மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் இறப்புக்கு நீதி கோரி சிபிஎம் சாலை மறியல்

மயிலாடுதுறை, மே 8-

     மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி வட்டம் பழை யாறு சுனாமி நகரில் மின்சா ரக் கம்பிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். அந்த ஊழியரின் இறப்புக்கு நீதி  கேட்டு உடலை வாங்க மறுத்து சீர்காழி வட்டாட்சியர் அலு வலகம் அருகில் மார்க்சிஸ்ட்  கட்சியின் தலைமையில்  ஞாயிறன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  

    கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருக்காவூர் ஊராட்சி,  கீராநல்லூர் மேலத்தெரு வைச் சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் (22). இவர் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதானம் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.  

  இந்நிலையில், சனிக்கிழ மையன்று மாலை பழை யாறு சுனாமி நகரில் மின்சா ரக் கம்பிகள் அமைக்கும்  பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் விபத்தில் சம்  பவ இடத்திலேயே உயிரிழந்  தார். பின்னர் அரவிந்த்ராஜ் உடல் சீர்காழி அரசு மருத்து வமனையில் உடற்கூராய் வுக்கு அனுப்பப்பட்டது.

 சாலை மறியல்

   இந்நிலையில், மின்சார  வாரியத்தின் அலட்சியப் போக்கும் மற்றும் மின்  வேலைக்கான தவறான ஒப்பந்த புள்ளி நடவடிக்கை களாலேயே இறப்பு ஏற்பட்ட தாக குற்றஞ்சாட்டி மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், ப.மாரியப்பன், ஒன்றி யச் செயலாளர்கள் கே.கேச வன், அசோகன் மற்றும் உயி ரிழந்த இளைஞரின் உற வினர்கள், பொதுமக்கள் சீர்  வாழி வட்டாட்சியர் அலுவல கம் அருகில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

   போராட்டம் அறிந்து வந்த சீர்காழி கோட்டாட்சியர், மின்  வாரிய அதிகாரிகள், காவல்  துறையினர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். மேலும் அப் பகுதியில் பல்வேறு  நிகழ்ச்சி களில் பங்கேற்க வந்த  அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

    உயிரிழந்தவரின் குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும்,  முதல்வரின் பொது நிவாரண  நிதிக்கு முன்மொழிவு அனுப்புவதாகவும் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட் டத்தை கைவிட்டு, அரவிந்த்  ராஜ் உடலை பெற்றுக்கொண்ட னர்.