districts

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு பெ.சண்முகம் வாக்கு சேகரிப்பு

நாகப்பட்டினம், பிப்.10-  நாகப்பட்டினம் மாவட்டம் பேரூ ராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில செயற்குழு உறுப்பினரும் விவ சாய சங்க பொதுச் செயலாளருமான பி.சண்முகம் வாக்கு சேகரித்தார்.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகராட்சி, தலை ஞாயிறு, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய பேரூராட்சிகளில் சிபிஎம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், நாகை மாவட்ட செயலா ளர் வீ.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி ஆகியோர் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தலைஞாயிறு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏ.சுபாஷினியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வேதரத்தினம் திறந்துவைத்தார். இதில் விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகையன், ஏ.வேணு, ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 வேளாங்கண்ணி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடும் வேட்பாளர் ஜானை ஆதரித்து தேர்தல் பணி மனையில் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு தலைவர்களுடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், ப.சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செய லாளர் எம்.அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கீழ்வேளூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் எம்.சாந்தியை ஆதரித்து தெருமுனை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் வாக்குகள் சேகரித்தார்.  நாகை மாவட்ட செயலாளர் வீ.மாரி முத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வீ.பி.நாகைமாலி ஆகியோர் வாக்குகள் சேகரிக்க பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எம்.அபூபக்கர், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்பாளர் எம்.சாந்தி நன்றி கூறி வாக்குகள் சேகரித்தார்.

;