districts

முடச்சிக்காடு சமத்துவபுரம் பகுதியில் பயனாளிகளுக்குவீடு புனரமைத்தல் ஆணை

தஞ்சாவூர், மே 2-  

   தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்  கொல்லை அருள்மிகு ஆதிசக்தி விநாயகர் திருக்கோவில் கலையரங்கம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.7 லட்சம், ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் என ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.  

  தொடர்ந்து முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடம், பள்ளி மாணவர்கள் பயன்படும் வகை யில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து  ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கழி வறை ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.  

  முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரத்தில் 99 வீடுகளை ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்தல், சமத்து வபுரம் ஆர்ச் ரூ.17 ஆயிரம் செலவில் புனரமைத்தல், பெரி யார் சிலையை ரூ.74 ஆயிரம் செலவில் புனரமைத்தல், மற்றும் ரூ. 32 லட்சம் செலவில் சாலை அமைத்தல் என  சமத்துவபுரத்தில் ரூ.97 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில்  பணிகளை  சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

  இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்து லெட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும்  திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.