திருச்சிராப்பள்ளி, ஜூன் 29 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய 4 வது மாநாடு திருப்பஞ்ஞீலி ஆர்.கே.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை முருகேசன் ஏற்றினார். செல்வ ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிதம்பரம் துவக்க வுரை ஆற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், துணைத்தலைவர் ரங்க ராஜன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் மனோ கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாகரா ஜன், மாதர் சங்க மாவட்டச் தலைவர் லிங்க ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் முழுவதும் உள்ள வாய்க்கால்கள், வடி கால் வாய்க்கால்கள் மற்றும் அனைத்து ஏரி, குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். ஒன்றியம் முழுவதும் உள்ள மயானங்களில் சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். விவ சாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் வழங்கும் உணவுப் பொருட் களை தரமாகவும், அளவு குறையாமல் தடையின்றியும் வழங்க வேண்டும். நூறு நாள் வேலைக்கு சட்ட கூலி ரூ.281 வழங்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.முத்தையா, செயலாளராக எஸ்.முருகே சன், பொருளாளராக கே.ராமகிருஷ்ணன், துணைச் செயலாளராக எஸ்.செல்லப்பெரு மாள், துணைத் தலைவராக எஸ்.பால முருகன் உள்பட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.