திருச்சிராப்பள்ளி, ஜூன் 24 - திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட உறையூர் காவல்கார தெருவில் அம்மிக்கல் கொத்தும் தொழில் செய்யும் 20 குடும்பத்தினர் கடந்த இரண்டு தலைமுறை களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் உறையூரில் ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடு கள் கட்டிக் கொடுக்கப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இங்குள்ள வீடு களுக்கு பட்டா மற்றும் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி யின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறையூர் பகுதிகுழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் உறையூர் குறத்தெருவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரேணுகா, மாவட்ட செயலாளர் சரஸ்வதி, பகுதி செயலாளர் லலிதா, சிபிஎம் உறையூர் பகுதிசெயலாளர் சந்திரபிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.