districts

35 ஆண்டுகளாக இந்து-முஸ்லீம் இணைந்து நடத்தும் கோயில் திருவிழா

அறந்தாங்கி, மே 30-

    மாவட்டம் கட்டுமாவடியில் தொடர்ந்து 35 ஆண்டு களாக இந்து - முஸ்லீம் இணைந்து கோயில் திருவிழா வை நடத்தி வருகின்றனர்.  

     புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள  ஏனாதி கிராமத்தில் முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மே 21 அன்று காப்பு  கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. காப்பு கட்டுவதற்கு  முன் இக்கோவிலுக்கு அருகில் உள்ள ஷேக் இஸ்மா யில் தர்காவில் பாத்திஹா ஓதி, நார்சா வழங்கப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டு ஜமாத்தார்கள் முன்னிலையில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.  

    பிறகு சுற்றுவட்டார ஒன்பது கிராம மக்களின் மண்ட கப்படி நடைபெற்றது. தினமும் இரவு இன்னிசை நிகழ்ச்சி களும், நாடகங்களும் நடைபெற்றன. மே 30 அன்று (செவ்வாய்) காவடி எடுப்பும், அன்னதானமும் நடை பெற்றது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை யும் ஏனாதி ஊர்மக்கள் மற்றும் கட்டுமாவடி ஜமாத்தார் கள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து 35 ஆண்டு களாக இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்துடன் இணைந்து நடத்தும் இந்த திருவிழா சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.