districts

img

அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய சிபிஎம் கோரிக்கை

குடவாசல், நவ.15- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடைமடை பகுதி களான திருக்கொட்டாரம், வேலங்குடி, கடகம் ஊராட்சி களில் தொடர்மழை, வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட பகு திகளில் விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். சேகர் தலைமையில் உறுப்பி னர்கள் பாதிக்கப்பட்ட பகுதி யை பார்வையிட்டு மக்க ளுக்கு ஆறுதல் கூறினர். நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள திருக்கொட்டாரம் கீழத்தெருவில் பெரும் தொடர்மழையால் 5-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தும், 10-க்கும் மேற்பட்ட வீடு களில் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுகிற நிலையில் உள்ளன. மணலி உள்ளிட்ட கிராமங்களிலும் வெள்ள மாக சூழ்ந்திருக்கிறது. வேலங்குடி ஊராட்சியில் கமுகக்குடி, முகந்தனூர் பகு திகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட பல ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி முற்றிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அரசை எதிர்பார்க்காமல் அகர முகந்தனூர் கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி கள் தங்களின் சொந்த செல வில், தாங்களே வாய்க்காலை வெட்டி மழை நீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். கடகம் ஊராட்சி  யில் 20-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கும் தலை யாரித் தெருவுக்கு செல்ல  நாட்டாற்றின் குறுக்கே செல் லும் தட்டிப் பாலத்தையே பயன்படுத்தி வருகிறார்கள். இதனை கடப்பதற்கு தற் போது ஆற்றங்கரை பாதை யில் முழங்கால் அளவுள்ள சேற்றில் நடந்து செல்ல வேண்  டிய நிலை உருவாகியிருக்கி றது. இதனை உடனே சீர்  செய்ய வேண்டும் என அப்  பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். பல இடங்களில்  வடிகால்கள் தூர்ந்து மழை நீர் செல்ல வழி இல்லாத சூழ லில், வயல்வெளிகள் அனைத்  தும் ஏரி போல் காட்சிய ளிக்கின்றன.

தத்தளிக்கும் பள்ளிக்கூடம் 

தொடர்ந்து நெடுங் குளத்தில் இயங்கி வரும்  ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளியை சிபிஎம் தலைவர்கள் பார்வையிட்ட னர். இந்த பள்ளி வளாகத்தில் மழைநீர் வடிய வழியின்றி, 3 மூன்று நாட்களாக தேங்கி யுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர், உரிய நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரியை தொடர்பு  கொண்டார். இதற்கு அருகே யுள்ள மாணவியர் விடுதி கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.  அங்கு சமையல் பணி யில் ஈடுபட்டிருந்த விடுதி  ஊழியர்களிடம் பாதிப்பு விவ ரங்களைக் கேட்டறிந்தனர். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு சமையல் செய்யக்கூட, சுகாதாரமான நீர் இல்லை. எனவே இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மிக  மோசமான பாதிப்பு உள்ள இந்த பகுதிகளை அரசு அதி காரிகள் உடனே பார்வை யிட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவா ரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.சேகர் தெரிவித் துள்ளார். ஆய்வின் போது, சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலா ளர் கே.எம்.லிங்கம், விவ சாயிகள் சங்கத்தின் ஒன்  றிய செயலாளர் தியாகு.ரஜி னிகாந்த், தலைவர் எம்.ராம மூர்த்தி, விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் செயலா ளர் சரவண.சதீஸ்குமார், தலைவர் ஏ.சங்கர் மற்றும் கிளை செயலாளர்கள் உட னிருந்தனர்.