தஞ்சாவூர், டிச.19 - தஞ்சாவூரில், “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வல்லம் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் மாண வர்களின் கல்வித்தரம் குறித்தும், மதிய உண வின் தரம் குறித்தும் ஆட்சி யர் ஆய்வு செய்தார். தொ டர்ந்து, வல்லம் தேர்வு நிலை பேருராட்சி பேருந்து நிலையத்தில் அமையப் பட்டுள்ள பாலூட்டும் அறை, நவீன கட்டண கழிப்பறை கள், இலவச கழிப்பறைகள் ஆகியவற்றின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்தும், வல்லம் துணை வேளாண் மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள், வல்லம் கால்நடை மருந்தகம், வல்லம் தேர்வுநிலை பேருராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்தும், பேருராட்சி வளம் மீட்பு பூங்கா, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் உரம் தயாரிக்கும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சி யர் கள ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் ஏராளமான பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், அதன் மீது உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநா தன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பால கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணிய முர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.