திருச்சிராப்பள்ளி, செப்.3- தென் மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 18 வது மாநாடு மதுரையில் செப்.25 மற்றும் 26 தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி பொது காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங் களில் ஊழியர் பணி நியமனத்தை வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம் திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஆசிரியர் இல்லத் தில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார். தென் மண்டல காப்பீட்டு கழக கூட்ட மைப்பு முன்னாள் பொதுச் செய லாளர் சுவாமிநாதன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், காப்பீட் டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் சேதுரா மன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி னர்.
மதுரை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் பாண்டியராஜன், பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல இணைச்செயலாளர் பாலசுப்ரமணி யன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க மண்டல குழு உறுப்பினர் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல், நியூ இண்டியா ஆகிய 4 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆயுள் காப்பீட்டு நிறுவ னத்தில் உள்ள 25ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொது இன்சூரன்ஸ், ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை மற்றும் தனியார் மய மாக்கும் முடிவினை கைவிட வேண்டும். அக்னி பாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக காப்பீட்டு கழக ஊழி யர் சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ் வரவேற்றார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார். இதில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ராஜன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கௌதமன், காப் ்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழகத் தில் இருந்து பொது இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீடு அதிகாரிகள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.