districts

img

பட்டுக்கோட்டையில் நத்தை, வயல் நண்டு விற்பனை அமோகம்

தஞ்சாவூர், ஜன.6- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் உடல் சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் வாய்ந்த ஏரி, குளங்க ளில் சேகரிக்கப்படும் நத்தை மற்றும் குளிர்கால காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் வயல் நண்டு விற்பனை அதிகரித்துள்ளது.  பொதுமக்கள் இயற்கையை கைவிட்டு, செயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருட்க ளை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்நிலையில் பட்டுக்கோட்டை பகுதி யில் மதுக்கூர் சாலையில் ஏரி, குளங்க ளில் சேகரிக்கப்படும் நத்தைகள் சாலை யோரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.  நத்தை கிலோ ரூ.300-க்கு விற்கப்படு கிறது. அதேநேரத்தில் கூறு கட்டி வைக்கப் பட்டு ரூ.100 முதல் 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏரி, குளங்களின் கரையோரங்களில் ஒதுங்கிய நத்தைகளை சேகரித்து வரும் வியாபாரிகள் அதனை சுத்தம் செய்து கூறுகளாக கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.  மேலும் சுமார் 20 வயல் நண்டு அடங்கிய பை ரூ.100க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதனை வாங்கிச் செல்வோர், அதனை இடித்து ரசமாக வைத்து சாப்பிடு வதால், பனிக்காலம், மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப் படுகிறது என்று சொல்கின்றனர். சளி, இருமலுக்கு வயல் நண்டு ரசம் சிறந்த பலன் தருவதாகவும் கூறுகின்றனர்.