அரியலூர், ஏப்.21 - திருமானூர் அருகே 300 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை மாதா ஆலயத்தின் பெருந் திருவிழா வையொட்டி நடைபெற்ற, அலங்கார தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் திருக்காவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் புகழ்பெற்ற புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டு, தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்த பழமை வாய்ந்த ஆலயத்தில், 53 அடி உயரமுள்ள பித்தளையிலான மாதா சொரூபம், ஜெபமாலை பூங்கா அமைந்து உள்ளது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தின் 293 ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்.13 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இத னையொட்டி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை யில் தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலி நிறை வேற்றப்பட்டது. பங்குத்தந்தை தங்கசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்ப்பவனியை தொடங்கி வைத் தார். இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.