மயிலாடுதுறை, ஆக.18 - கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சேவை மருத்துவர்கள் மீது தொடரும் கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டலத் தலைவர் மருத்துவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவர் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் ஜெயங்கொண்டம் கிளை சார்பாக நடந்த போராட்டத்திற்கு தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார்.