தஞ்சாவூர், ஏப்.25-
மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருப்பதால், இவ்வாண்டு ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பிருப்பதால், டெல்டா மாவட் டங்களில் உடனடியாக தூர்வாரும் பணியைத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலு வலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட் டம் செவ்வாய்க்கிழமை கோட்டாட் சியர் (பொறுப்பு) கோ.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், திருவையாறு, தஞ் சாவூர், ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயி களும், அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசி யதாவது:
விவசாயிகள் ஆழ்குழாய்க் கிணறு மற்றும் சாதாரணக் கிணறு களில் பாசனம் செய்ய ஏதுவாக இது வரை தமிழக அரசு 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஏட்டளவிலேயே உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு வட்டாரங்களில் பல இடங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது.
மின்கம்பிகள், தளவாடப் பொருட்கள் இல்லாததால் மின் இணைப்புகள் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் மின் இணைப்பு பெற முடியாமல் அவ திப்படுகின்றனர்.
பல கிராமங்களில் பகல் நேரங்க ளிலும் தெருமின் விளக்குகள் தொட ர்ந்து எரிகிறது. மின் வெட்டும், குறைந்த அழுத்த மின்சார விநி யோகமும் அதிகமாக உள்ளது.
ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாபட்டு, திருவையாறு அருகே அம்மையக ரம் போன்ற கிராமங்களில் குறைந்த ழுத்த மின்சாரத்தால் குடிநீர் பற்றாக் குறை மட்டுமல்லாது கோடை சாகு படியான உளுந்து, பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடி யாத நிலை உள்ளது.
கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ஆனால் விவசாயி களுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதை கள் தேவையான அளவு விவசாயி களுக்கு விநியோகம் செய்ய வேண் டும்.
மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருப்பதால், இவ்வாண்டு ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பிருப்பதால், டெல்டா மாவட் டங்களில் உடனடியாக தூர்வாரும் பணியினை தொடங்க வேண்டும்.
அப்போது தான் ஏ.பி.சி,டி வாய்க் கால்களில் உரிய நேரத்தில் தண் ணீர் சென்று சேரும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இவ்வாண்டு 2.40 லட் சம் டன் கரும்பு அரவை செய்யப் பட்டுள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்த கரும்பு விவசாயிகளுக் கான ஊக்கத் தொகையை உட னடியாக வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டியில் காட்டாற் றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும். திருவையாறு பகுதி யில் உள்ள ஆறுகளில் விதிகளுக்கு புறம்பாக இரவு பகலாக மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். திருவையாறு புறவழிச்சாலை தொடர்பாக தொடர்ந்து 137 நாட்க ளாக தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் விவாசாயிகளின் உணர்வு களை உணர்ந்து, பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
திருவையாறு, திருக்காட்டுக்ப பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி பகுதிகளில் நீர் ஆதா ரங்களாக திகழும் ஆறுகள், வாய்க் கால்களில் குப்பைகளை கொட்டி எரியூட்டுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த மாதம் நடைபெற்ற கூட் டத்தில் நெல் கொள்முதலில் நடை பெறும் முறைகேடுகள் தொடர்பாக விவசாயிகள் விடுத்த கோரிக்கை களுக்கு தீர்வுகளை தெரிவிக்க அந்த துறைசார்ந்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து கோட்டாட்சியர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய தைத் தொடர்ந்து அந்த அலுவல கத்திலிருந்து அலுவலர் வந்து கூட்டத்தில் பங்கேற்றார்.