திருவாரூர்,அக்.5- தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை வழங் காத கர்நாடகா அரசைக் கண்டித்து குட வாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே குடவாசல் பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும், காவிரி ஒழுங்காற்று ஆணை யத்தின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பங்கிட்டு முழு அளவையும் வழங்காததை கண்டித்தும் டெல்டாவில் கருகும் குறுவை பயிரைக் காக்கவும், சம்பா வைத் தொடர உடனடியாக காவிரி ஆணை யம் உத்தரவுட்டுள்ள நீரை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி குடவாசல் பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நகர் செயலாளர் டி.ஜி.சேகர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாப்பா சுப்பிரமணி யன், மூலங்குடி அசோகன், குடவாசல் பேரூ ராட்சித் துணைத்தலைவர் குணசேகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.