districts

img

மேகதாது அணை கட்டக் கூடாது! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

தஞ்சாவூர், பிப்.28- மேகதாது அணை கட்டும் ஒன்றிய, கர்நாடக அரசுகளின் நட வடிக்கைகளுக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன் கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய  கோரிக்கைகள் வருமாறு: தூர்வாரும் பணிகளை அனைத்து பகுதிகளிலும் செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லணை தலைப்பு பகுதியில் செய்தால்தான் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்றடையும். செங்கிப்பட்டி பகு திக்கு காவிரி நீர் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண் டும்.கல்லணை தலைப்பு பகுதி யில் தூர்வாரும் பணி தொடர்பாக தனியாக கருத்துரு தயார் செய்யு மாறு நீர் வளத்துறை அலுவலர் களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி னார். தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தால், தில்லி போ ராட்டத்தைப் போன்று, மேகதாது அணைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். மாவட்டத்தில் வியாபாரிகள் நெல்  விலையைக் குறைக்காமல் இருக்க, அறுவடை செய்யப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலை யங்களைத் திறக்க வேண்டும். தளம் அமைத்து  மதகு சீரமைக்க... வடகாடு வாய்க்காலில் இருந்து  பிரியும் வி.பி. 5 ஆம் எண் வாய்க் கால் மூலம் கடைமடைப் பகுதியில்  800 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதில், தரைத்தளம் அமைத்து மதகுகளைச் சீரமைக்க வேண்டும். மேகதாது அணையைக் கட்ட நட வடிக்கை எடுத்தால், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை  செய்து கொள்வோம். எனவே, மேக தாது அணை கட்டும் நடவடிக் கையை ஒன்றிய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து நிலக்கட லையை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். எனவே, நெல் கொள்முதலைப் போலவே, நிலக்கடலையையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தூர்வாரும் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி போதுமானதல்ல. தூர்  வாரும் பணி எந்தெந்த வாய்க்கா லில் நடைபெறுகிறதோ, அது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த இடத் தில் அத்திட்டம் குறித்த தகவல் பல கையை அமைக்க வேண்டும். தூர்வாரும் பணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் தகவல்  பலகை வைக்குமாறு நீர்வளத்  துறையினருக்கு ஆட்சியர் அறி வுறுத்தினார். பாராட்டு இதனிடையே, 25 ஆண்டு களாக மரபு வழியில் இயற்கை விவ சாயம் செய்து வரும் இயற்கை வேளாண் அறிஞர் கோ.சித்தர், தமிழக அரசின் நம்மாழ்வார் விருது  பெற்றதைப் பாராட்டி, அவருக்கு மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகி யோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

தூர்வாரும் பணி கண்காணிப்புக் குழுவை விவசாயிகள் பங்கேற்புடன் அமைக்கலாம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்  என்.வி.கண்ணன் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.25.41 கோடியில் 1,210 கி.மீட்டர் தூரத்திற்கு 261 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அது தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முன்கூட்டியே பிப்ரவரியில் பணியை தொடங்குவது வரவேற்கத்தக்கது. தற்போது எந்தெந்த பணிகள் நடைபெறவுள்ளன, எந்தப் பகுதியில் நடைபெற உள்ளது சென்ற விவரம் வெளியிடப்பட வேண்டும். மேலும் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க, உரிய கண்காணிப்பு குழுக்களை விவசாயிகள் பங்கேற்போடு அமைப்பதும், கண்காணிப்புக்கு உள்ளாக்குவதும் பணி சிறப்பாக நடைபெற உதவிகரமாக இருக்கும். நமது மாவட்டத்தில் பாசனம் பெறும், உய்யக்கொண்டான், கட்டளைக் கால்வாயில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஏரிகள் தூர்வாரப் படுவதற்காள பணிகள் தொடங்கப்பட வேண்டும். பாசன வாய்க்கால்கள் திருச்சி ஆற்றுப் பாசன பாதுகாப்பு கோட்டத்தில் வருவதால் உரிய ஏற்பாடு செய்து  வேண்டுகிறேன்” என கூறப்பட்டுள்ளது.