தஞ்சாவூர், ஜன.2– தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன் பேட்டை, ராயந்தூர், சித்தாயல், குணமங்கலம், வைர பெரு மாள்பட்டி, அய்யாசாமிபட்டி, மருதக்குடி, திருவேங்கட உடை யான்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வியாழக்கிழமை ஆட்சியர் அலு வலகத்திற்கு, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பதரான நெற் பயிர்களுடன் வந்து மனு அளித்த னர். அந்த மனுவில், கடந்த மாதம் பெய்த கனமழையால், கதிர் வரும் நிலையில் இருந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, நெல்மணிகள் எல்லாம் பதராகிவிட்டன. மேலும், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டை வரை மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவ லர்கள் முறையாக கணக்கீடு செய்து, இழப்பீடு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை பிடித்திடுக மேலும், கள்ளப்பெரம்பூர் ஏரி யில் அதிகளவில் காட்டுப்பன்றி கள் உள்ளன. அந்த காட்டுப் பன்றி கள், பயிர்களை அழித்து விடுவ தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும் என ஏற்கனவே மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்திடுக தற்போது, மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியுள்ள நிலை யில், எங்கள் பகுதிகளில் சில இடங்களில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவை உள்ளது. அதற்கு ஏற்ப, பாசனத்திற்காக தண்ணீரை திறக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால், வரும் 6 ஆம் தேதி பூதலூரில், விவசாயிகள் அறப்போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.