தஞ்சாவூர், ஆக.20 -
தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம், 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.
தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயி களுக்கும் மற்றும் இப்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்புக் கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறி யாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.