districts

img

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் விவசாயிகள்

தஞ்சாவூர், செப்.14-  தஞ்சாவூர் அருகே, அரசு நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்படாததால், தனியா ரிடம் குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல்லை விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே திட்டை கிராமத்தில் சுமார் 150 ஏக்கரில் முன்பட்ட குறுவை நெல், பம்பு செட் மூலம் சாகுபடி செய்யப்பட்டது.  நெல் அறுவடை நடைபெற்ற வருகிறது. அறு வடை செய்யப்பட்ட நெல்லை விவசாயி கள் வழக்கம் போல் திட்டையில் உள்ள தமி ழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் கொண்டு வந்து விற்பனைக்காக குவி யல் குவியலாகக் கொட்டி வைத்துள்ளனர். ஆனால், கொள்முதல் நிலையத்தில் மின்சார இணைப்புக்கு பணம் செலுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் தவறியதால், மின்சாரத்தை துண் டித்து மீட்டரை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் கொள்முதல் நிலையம் திறக்கப் படாததால் விவசாயிகள் நெல்லை அங்கு குவித்து வைத்துள்ளனர். மழை அவ்வப்போது பெய்து வருவ தால், கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்  மணிகள் மழையால் சேதமடைந்து வருவ தாகவும், கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்த நெல்லை, வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்  பனை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து, திட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், “திட்டை பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக எங்க ளது ஊரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலை யம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.  கடந்த சம்பா பருவம் வரை விவசாயிகளிடமி ருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. முன்பட்ட குறுவை அறுவடை செய்த விவசாயிகள் பலரும் தங்களது நெல்லை திட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலை யத்தில் கொண்டு வந்து இரு வார காலமாக கொட்டி வைத்துள்ளோம். விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்த தக வலை நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வா கத்துக்கு தெரியப்படுத்தினோம்.  அவர்கள் இன்று திறக்கிறோம், நாளை  திறக்கிறோம் என கூறி காலம் தாழ்த்தி வரு கின்றனர். கொள்முதல் நிலையத்தில் நெல் லில் இருந்து தூசிகளை நீக்க மின்சாரம் மூலம் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  இதற்கிடையில், மெலட்டூர் துணை மின் நிலைய அதிகாரிகள் வந்து, கடந்த வாரம்  மின்வாரியத்துக்கு மின் கட்டணத் தொகை யை செலுத்தவில்லை எனக்கூறி மின்சா ரத்தை துண்டித்து வயர்களை சுருட்டி வைத்து விட்டு, மின் மீட்டரை எடுத்துச் சென்று விட்ட னர். அதன் பிறகு விவசாயிகள் எல்லோரும்  ஒன்று சேர்ந்து ரூ.15 ஆயிரம் ரூபாயை வசூ லித்து மின்வாரியத்துக்கு, தமிழ்நாடு நுகர்  பொருள் வாணிபக் கழகத்துக்காக விவசாயி களே முன்வந்து செலுத்தியுள்ளோம். இன்  னும் மின் இணைப்பும் கொடுக்கப்பட வில்லை. கொள்முதல் நிலையமும் திறக்கப்  படவில்லை. தற்போது மழை அவ்வப்போது பெய்து  வருகிறது. விவசாயிகள் சுமார் 2 ஆயி ரம் மூட்டை நெல்லை கொண்டு வந்து  கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்து  இரவு பகலாக காத்திருக்கிறோம் என்ற னர்”. கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்த நெல்லை, குறைவான விலை கிடைத்தா லும் பரவாயில்லை என தனியார் வியாபாரி களிடம் விவசாயிகள் விற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலை யிட்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை வழங்கி, கொள்முதல் நிலையத்தை திறக்க  வேண்டும்.