பாபநாசம் மே 25-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் வெட்டாற்றில் நாணல்கள், சீமை கருவேல முள் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் வெட்டாற்றை தூர்வார அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘வெட்டாற்றை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. திருக்கருக்காவூரிலிருந்து மெலட்டூர் வரை வெட்டாற்றில் நாணல்கள், சீமை கருவேல முள் உட்பட வளர்ந்து நீரின் போக்கை தடுக்கின்றன. ஆங்காங்கே மேடு, பள்ளத்தாலும் நீரின் போக்கு தடைப்படுகிறது. இதனால் வாய்க்கால் பாசனம் பாதிக்கப் பட்டுள்ளது.
இதே நிலை தான் தென் கரை ஆலத்தூர் வரை உள்ளது. ஒரு நாள் மட்டும் திருக்கருக்காவூர் வெட்டாற்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெயரளவில் தூர்வாரப்பட் டது. அடுத்த ஆண்டாவது வெட்டாற்றில் தூர்வாரும் பணி நடக்குமா என்பது தெரிய வில்லை’’ என்றனர்.