districts

குடும்ப நல நிதியை உயர்த்தி வழங்க கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 24 -

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் திரு விடைமருதூர் ஏழாவது வட்டப் பேரவை நடைபெற்றது. வட்டத் தலைவர்  கே.சிவராமன் சங்க கொடியை ஏற்றி வைத்து தலைமையேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் பேரவையை துவக்கி வைத்தார். இதில் சங்க வளர்ச்சி நிதிக்கா ரூ.2000 முதல் தவணை யாக வழங்கப்பட்டது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச  ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி யினை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக  உயர்த்திட வேண்டும். தமிழக அரசு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியர் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு எளிதில் மருத்துவ காப்பீடு அட்டை கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.