districts

img

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்குக! கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 22- தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், நியாயவிலை கடைகள் பிரச்சனைகள் குறித்து செயல் தலைவர் அசோகன் பேசினார். வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் சௌந்தர்ராஜன் சமர்ப்பித்தார். பொதுச்செயலாளர் ஜீவானந்தம் சிறப்புரை ஆற்றினார்.  கூட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். வேளாண்மை விற்பனை சங்க பணியாளர்களுக்கு சம்பள விகிதம் உடனே வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில மாநாட்டை திருவாரூரில் ஜூலை கடைசி வாரத்தில் வெகு சிறப்பாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் நிர்வாகிகள் முருகையன், சாதிக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத் தலைவர் வின்சென்ட் வரவேற்றார். முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்.

;