districts

வரி செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

கும்பகோணம், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு வரி செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையர் லெட்சுமணன் எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநக ராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்ட ணம், பாதாளச் சாக்கடை சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்த  வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை  உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்-லைன் மூலமாகவோ  செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு வரியை கட்டத் தவறி னால் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு,  பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப் படும். மேலும் கடை வாடகையை செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப் படும். எனவே பொதுமக்கள் மற்றும் வியா பாரிகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய  வரியை உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்  கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.