districts

பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை புகார் குழு அமைக்க வேண்டும்

நாகர்கோவில், ஏப்.15- பணியிடத்தில் பெண்களுக்கு  பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதைத்  தடுக்க  புகார் குழு அமைக்க கன்னியாகுமரி ஆட்சி யர் பி.என். ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில்  பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு துறை  அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்  (மருத்துவமனைகள், பள்ளிகள், கல் லூரிகள், ஜவுளிக்கடைகள்) தனியார்  தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பத்துக்கும்  மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்ப தற்காக உள்ளக குழு அமைக்க வேண்டும்.  இந்தக்குழு நான்கு உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். மொத்த உறுப்பி னர்களில் பாதிப் பேர் பெண்களாக இருக்க  வேண்டும் இதன் அலுவல் காலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற் குரியதாகவும் அமைக்க வேண்டும்.  இவ்வாறு குழு அமைக்கத் தவறினால்  சட்ட விதிகளுக்கு இணங்காத குற்றத்துக் காக ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் படும். குழுவானது பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்குத் துணை புரிய வேண்டும்.  பெண்கள் தங்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்படும் நிலையில்  இந்தக் குழு மூலம் தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிபுரி யும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறு வதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார்ப் பெட்டி வைக்க வேண்டும்.  இது தொடர்பான கூடுதல் விவரம் அறிய  மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்புக்  கட்டடத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல  அலுவலகத்தை நேரிலோ அதன் தொலைபேசி எண்ணான 04652-278404 என்ற  எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.