குழித்துறை, பிப்.20- குழித்துறை நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ௹த் மீதும், அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய ஊழியரின் கார் மற்றும் வீடு மீதும் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். குழித்துறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் போட்டியிடும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் அனைத்து வார்டுகளிலும் வெற்றி அடையும்நிலை ஏற்பட்டதால் விரக்தியடைந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் வாக்குச்சாவடி களில் அராஜகம் செய்ய தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஜூலியட் மெர்லின் ரூத் போட்டியிடும் 12ஆவது வார்டு வாக்குப் பதிவு தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லிசி பாய் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பதுபோல் பணம் கொடுத்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அங்கிருந்த காவலர்களிடம் புகார் கூறினார். அப்போது உங்கள் எல்லை 100 மீட்டரை கடந்து நில்லுங் கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ரூட் மற்றும் 11ஆவது வார்டு வேட்பாளர் ருக்மணி அம்மாள் ஆகிய இருவரையும் வெளியேற்றி னார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் லிஜி பாய் மட்டும் வாக்குச்சாவடிக்குள் இருந்தார்.
பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மார்த்தாண்டம் நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ரூத்திடம் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவத்தை வேட்பாளரின் கணவர் சம்பத் தனது செல்பேசியில் வீடியோ எடுத்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சுரேஷ் உடன் வந்த தங்கப்பன் என்பவர் அவரு டைய செல்போனை கையிலிருந்து பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். வேட்பாளரை யும் அவரது கணவரையும் வயிற்றில் ஏறி தாக்குதல் செய்ய தொடங்கியதில் சம்பத் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படு காயமடைந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வாக்குப்பதிவு தினமான பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 11 மணி அளவில் மார்த்தாண்டம் டி.ஒய்.எப்.ஐ. வட்டார தலைவர் ஜீனோ ஜினைட் வீட்டிற்கு காங்கி ரஸ் வட்டார தலைவர் சுரேஷ் தலைமையி லான கூலிப்படை சென்றுள்ளது. அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான காரினை அடித்து நொறுக்கினர். வீட்டின் ஜன்னல் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த அவருடைய வயதான பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார் மின், வட்டார குழு செயலாளர் மோகன் குமார், மாவட்டகுழு உறுப்பினர் அனந்த சேகர், டிஒய்எப்ஐ மாவட்ட தலைவர் ரதீஷ், மாவட்டச் செயலாளர் எட்வின் பிரைட், 12 ஆவது வார்டு வேட்பாளர் ஜூலியட் மெர்லின் ரூத், வட்டார குழு உறுப்பினர்கள் எட்வின் ராஜா, மதன்மோகன் லால் ஆகியோர் தாக்கப்பட்ட வீட்டினை பார்வையிட்டு அவரு டைய பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும், காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தக்கலை டிஎஸ்பி, மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். இதுகுறித்து மார்த்தாண் டம் வட்டார குழு செயலாளர் மோகன் குமார் கூறியதாவது: தோல்வி பயத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிப்ரவரி 18ஆம் தேதியில் இருந்து அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். ஆனாலும் கம்யூ னிஸ்ட் கட்சி அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.