புதுக்கோட்டை, அக்.19:- முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தொடர்ந்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவ தில் இருந்து தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே அரையப்பட்டியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமிற்கு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமை வகித்து பேசியதாவது:- பொதுமக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லாத மக்களுக்காக கொரோனா காலத்தில் வீடுக ளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் மக்களை தேடி மருத்துவ முகாம் தொடங்கப் பட்டது. அதேபோல், நோய்வரு முன் தங்களை காத்துக்கொள்வதற் காக வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. 9 ஆண்டுகளாக தமிழக சுகா தாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் இப்பகுதிக்கு எதை யும் செய்யவில்லை. தற்போது, திமுக ஆட்சியில் ரூ.46 கோடி மதிப் பீட்டில் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருமயம், ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஆலங்குடி அரசு மருத் துவமனைகளுக்கு மருத்துவ தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உபகரணங் கள் மற்றும் கட்டடப் பணிகளை செய்யாத விஜயபாஸ்கர் வாயில் வந்ததை எல்லாம் கூறி வருகி றார். தொடர்ந்து அவர் பொய் பேசு வதில் இருந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். நபார்டு திட்டத்தின் கீழ் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 2 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரம், மேற்பனைக்காடு 2 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரம், கீரமங்கலம் 3 கோடியே 63 லட்சத்து 22 ஆயி ரம், கொத்தமங்கலம் 4கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம், அரை யப்பட்டி 4 கோடியே 19 லட்சத்து 22ஆயிரம், குளமங்கலம் தெற்கு உயர்நிலைப்பள்ளி 2 கோடியே 31 லட்சம், ஆலங்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 3 கோடியே 45 லட்சத்து 61 ஆயிரம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி 4 கோடியே 32 லட்சத்து 22 ஆயிரம், திருநாவூர் தெற்கு உயர்நிலைப்பள்ளிக்கு 2 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டம் கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.. சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலர் ராம் சந்தர், வட்டாட்சியர் பெரியநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.