பாபநாசம், மார்ச் 11 - பிரதமர் நரேந்திர மோடி நூறு முறை சுற்றுப் பயணம் வந்தாலும், தமிழ்நாட்டில் தாமரை மலராது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயி றன்று நடைபயணம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு பாபநாசம் ஒன்றியச் செயலர் முரளிதரன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் வர வேற்றார். பாபநாசம் புனித செபஸ் தியார் திருத்தலம் பங்குத் தந்தை கோஸ்மான் ஆரோக்கிய ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ஒன்றிய அரசின் மதவெறி ஆட்சி யால் சிறுபான்மை மக்கள் ஏராள மான பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்ற னர். சிறு, குறு தொழில் நடத்துப வர்கள் நடுத்தெருவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். விலைவாசி விண்ணை முட்டுகிறது. திட்டமிட்டே விலைவாசி ஏற்றப்படுகிறது. உழைக் கும் மக்களை பாதுகாக்கும் பணி யில் என்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி களத்தில் நிற்கும். மோடியின் கேரண்டி நம்மை (ஏழை-எளிய மக்களை) அதலபாதா ளத்திற்குள் தள்ளுகிறது. அம்பானி, அதானியின் வாழ்வாதாரம் வளர் கிறது; நமது வாழ்வாதாரம் நசுங்கு கிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு பக்கமே சுற்றுப் பயணம் மேற் கொள்கிறார். மோடி நூறுமுறை வந்தாலும், தமிழ்நாட்டில் தாமரை மலராது. ஒன்றிய பாஜக அரசு மநு வாதத்தை கடைப்பிடிக்கிறது. 2024 தேர்தலை சாதாரணமாக கருதக் கூடாது. பா.ஜ.க-வை முற்றாக நிரா கரிக்க வேண்டும்” என்றார். இதில் மாவட்டச் செயற்குழு செந்தில் குமார், மாவட்டக் குழு காதர் உசேன், சிறு பான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலர் குருசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலர்கள், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலை வர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றியக் குழு சங்கர் நன்றி கூறினார். முன்னதாக மாலை அய்யம் பேட்டையில் தொடங்கிய நடைப் பயணத்தை மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி தொடங்கி வைத் தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், நீல மேகம், மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் உட்பட பலர் பங்கேற்ற னர்.