districts

img

7 நாள் ஆகியும் மழைநீர் வடியாததால் கால்நடைகள் செத்து மிதக்கின்றன

தூத்துக்குடி , டிச. 24 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரண மாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியது.  தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள் காலனி, விஎம்எஸ் நகர், தேவர் காலனி, குறிஞ்சி நகர், ஸ்டேட் பேங்க் காலனி, ராஜூவ் நகர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு உள்ள மக்கள் மிகவும் அவ திப்பட்டனர். மேலும் சிலர் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். வீட்டை காலி செய்து உற வினர்கள் மற்றும் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  இந்த நிலையில் 7ஆவது நாள் ஆகியும் இன்னும் தண்ணீர் வழியாததால் விஎம்எஸ் நகர் பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் விஎம்எஸ் நகர் பகுதியில் தேங்கிய மழை நீரில் கால்நடைகள் செத்து மிதக்கின்றது இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.