districts

img

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு: ஸ்கேட்டிங் பேரணி

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் மற்றும் சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி திருச்சியில் நடைபெற்றது.  இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட கூடுதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கொடிசைத்து துவக்கி வைத்தார். இதில் தென்னிந்திய ரோல் பால் ஸ்கேட்டிங் செயலாளர் சுப்பிரமணி, திருவாரூர் மாவட்ட ரோல் பால் தலைவர் சரவணன், சாய் ஜி ரோல் பால் அகாடமி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக இந்த பேரணியானது, திருச்சி கே.கே நகர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி உடையான்பட்டி பகுதியில் உள்ள சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி வரை நடைபெற்றது. பேரணியில் 30-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

;