அறந்தாங்கி, ஏப்.7- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி நகரில் இயங்கி வரும் செலக் சன் கல்வி குழும நிறுவனர் கண்ணய்யா தலைமையில், சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. செலக்சன் கல்வி குழுமத்தின் தாளா ளர் சுரேஷ்குமார் வரவேற்றார். அறந் தாங்கி ஜமாத் தலைவர் சேக் அப்துல்லா உள்பட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கங்கள், வணிகர் சங்க, வர்த்தக சங்க, இந்திய மருத்துவ கழக, கராத்தே பிரதர்ஸ் சமூக சேவை அமைப்பு, திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு, அக்னி சிறகுகள் சேவை அமைப்பு மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் என மும்மதத்தினரும், இந்த இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டனர். இஸ்லாமிய போதகர் நோன்பு திறக்கும் வசனங்களை முன்மொழிய அனைவரும் வழி மொழிந்து பேரீச்சை பழம், நோன்பு கஞ்சி, தண்ணீர், பழச் சாறு, இரவு உணவு உண்டு மகிழ்ந்தனர்.