அரியலூர், ஜூன் 8-
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலு வலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை உரை யாற்றி சுற்றுச்சூழல் செயல் வீரர் விருதை ஜெயங் கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவர் முத்துக்குமரனுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா ளர் சுப்ரியா சாஹூ, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் தீபக் எஸ் பில்கி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் ஜெயந்தி ஆகி யோர் உடனிருந்தனர்.