districts

img

மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்டேசனுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை, ஏப்.3- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடே சன், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் புதன் கிழமையன்று வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.  சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் காத்திருந்து வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

சிலம்பக்கோன்பட்டியில் காலை 6 மணி  அளவில் பிரச்சாரம் துவங்கியது. பிரச்சா ரத்தை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.  பிரச்சார கூட்டங்களில்,  சு.வெங்கடேசன் பேசுகையில், ‘‘இந்தியாவின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான  தேர்தல் இது. மக்கள் விரோத பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.

சிலம்பக்கோன்பட்டியில் மற்றொரு செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது நிறுவப் படும். மக்களுக்கான நல்லாட்சிக்கு உதாரண மாக தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.  திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம்தோ றும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், கல்லூரிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்க ளுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலே தமிழகத்தில் முதன் முறையாக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்க ளுக்கு காலை உணவுத் திட்டம் வரப்பிரசாத மாகும். இதே போன்ற நல்ல ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்றால் பொதுமக்கள் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதர வளிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரான எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்றார். பாண்டாங்குடியில் கிராம மக்கள் வேட்பா ளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். தொந்திலிங்கபுரம் காலனி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று சு.வெங்கடேசன் எம்.பி. செய்த பணிகளை நினைவுகூர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.  பிரச்சாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் என்.பழனிச்சாமி, திமுக ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பழனி, ராஜராஜன், நிர்வாகிகள் வேலாயுதம், கரு.தியாகராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மாநில பொதுக் குழு உறுப்பினர் நூர்முகமது, கே.வி.வி. ரவிச்சந்திரன், திலகராஜ், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.மார்நாடு, வக்கீல் அழகர்சாமி, மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செய லாளர் அரசமுத்து பாண்டியன், அய்யாவு, பாண்டியம்மாள், சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பா.காளிதாஸ், தமிழ்ப்புலிகள் அமைப்பின் நீதிவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் மணியமுதன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.