districts

நாளை திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற (8ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகா மில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணி யிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்க உள்ளன. இவ்வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பனி ரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் 18-வயதிற்கு மேல் 35-வயதிற்குள் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

;