சென்னை, ஜூன் 2- சென்னை திருவொற்றியூரில் ஞாயிறன்று (ஜூன் 5) இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்டஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் வரும் 5ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் வரை படித்து வேலை தேடும் அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்கள் கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.