districts

img

பணி ஆணை கிடைத்தும் பணியில் சேர அலைக் கழிக்கப்படும் ஊழியர்கள்

காஞ்சிபுரம், மார்ச் 5 - காஞ்சிபுரம் கூட்டுறவுத் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு கடந்த நவம்பரில் பல்வேறு கட்ட மாக தேர்வுகள் நடை பெற்றது. இதில் 96 நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட நிலையில்  43 பேர் இறுதித் தேர்வில்  வெற்றி பெற்றனர். கடந்த 9ஆம் தேதி மாவட்ட  ஆட்சியர் கலைச்செல்வி பணி நியமன ஆணையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 35 பேர் பணியில் சேர்ந்தனர் பெரிய காஞ்சிபுரம் கூட்டு றவு வங்கியில் பணி கிடைத்த  8 நபர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக பணியில் சேர  முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. நாள்தோறும் வங்கிக்கு சென்று இது குறித்து துணை  பதிவாளர் மற்றும் செயல்  ஆட்சியர் உமா தேவியை  சந்திக்க முயன்றும் முடிய வில்லை ஒரு மாத காலமாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஏற்கெ னவே இருந்த வேலையை இழந்து தற்போது குடும்ப வாழ்வாதாரம் பெரும் சிக்கலாகி உள்ளது என பணியாணை பெற்றவர்கள்  கண்ணீர் மல்க தெரிவிக் கின்றனர். பணி கிடைத்த 8 பேரில் 6 நபர்கள் திருமணம் ஆனவர்கள் என்பதும் குடும்ப வாழ்வாதாரத்திற்கு பெரிதும் சிரமப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் பணி கிடைக்குமா  என்ற கேள்வி எழுந்துள் ளது.  மேலும் பல நூற்றாண்டு களைக் கண்ட பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி  மிக சிறந்த வங்கி என பெயர் பெற்ற நிலையில் இது போன்ற அலுவலர்களின் செயல்களால் கூட்டுறவு துறைக்கே களங்கம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.