பெரம்பலூர், ஜன.6- மின் வாரியத்தில் பணிபுரியும் கேங் மேன் (பயிற்சி) பணியாளர் கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று பெரம்ப லூர் நான்கு ரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல் வம், வட்ட பொருளாளர் மு.கண் ணன், கேங்மேன் குழு உறுப்பி னர்கள் இளங்கோவன், சிவ குமார், மணி ஆகியோர் விளக்கிப் பேசினர். கேங்மேன் பணியாளர்களை நவீன கொத்தடிமைகள் போல் நடத்துவதை தவிர்க்க வேண்டும், பணிவரையறை செய்து உத்தரவு வழங்க வேண்டும், பயிற்சி காலத்தை இரண்டு வருடம் என்பதை 3 மாத காலமாக குறைக்க வேண்டும், சொந்த மாவட்டங்களுக்கு செல்ல விருப்ப இடமாறுதல் உத்தரவு வழங்கிட வேண்டும், வாரிய விடுப்பு சலுகைகள், பயணப்படி பாதுகாப்பு சாதனங்கள், பணி பதிவேடு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கனகராஜ் முத்துசாமி, சோமசுந்தரம், பாரதி, ராஜீவ் காந்தி, பாண்டி யன், சுரேஷ் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.