districts

தனியார் நிறுவன ஏல முறைகேடு: விசாரணை நடத்த வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 19 - தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகத்தில் தனியார் நிறுவனத்துக்கு விடப்பட்ட ஏல முறைகேடு தொடர்பாக  குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. மேயர் சண்.ராமநாதன் தலைமையி லும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி,  ஆணையர் இரா.மகேஸ்வரி முன்னி லையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மொத்தம் 50 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகம் புதிதாகக் கட்டப்பட்டு, விடப்பட்ட ஏலம் முறையாக நடைபெற வில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுப் படி ஏலத்தை ரத்து செய்வது குறித்து தொ டர்புடைய தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது எனவும், அதற்கு தனியார் நிறுவனம் அளித்த  பதில் சம்பந்தம் இல்லாத, உண்மைக்கு  புறம்பான ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, தாங்கள் செய்த தவறை திசை  திருப்பும் நோக்கிலும், நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என்றும், தனியார் நிறுவனத்தின்  பதில் ஏற்றுக் கொள்ள இயலாத வகை யில் உள்ளதால், ஏலம் மற்றும் மாநக ராட்சியுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப் படுவது குறித்த தீர்மானமும் இடம் பெற்றது. இத்தீர்மானம் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், இந்த  தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.  இந்த ஏலத்தில் முந்தைய ஆணையர் தவறு செய்திருந்தால், அவருக்கு துணையாக இருந்த மேயர் மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வர  வேண்டும். இந்த ஏலத்தில் முறைகேடு கள் செய்த அலுவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர் பாக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட் டோர் கொண்ட குழு அமைத்து விசா ரணை நடத்த வேண்டும் என்றனர். அதற்கு மேயர், யாராக இருந்தா லும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும் என பதிலளித்தார். மேலும், முந்தைய ஆணையர் சரி யாக செய்யாமல் தனியார் நிறுவனத் துக்கு ஏலம் விட்டுள்ளார். இந்தச் சூழ்நி லையில் இந்நிறுவனத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத் தார். இந்தத் தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்கான காரணம் என்ன என்ற  கருத்தும் எழுந்தது.  இதனால், உறுப்பி னர்கள் கேட்டுக் கொண்டபடி தீர்மானம்  ஒத்தி வைக்கப்படுகிறது என மேயர் அறி வித்தார். இந்நிலையில், இத்தீர்மானத்தை ஒத்தி வைக்காமல் நீதிமன்ற உத்தரவு படி, அந்த இடத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி சரி யான நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பதிலளித்தார். தொடர்ந்து, இந்த தீர்மானம் தொ டர்பாக கூட்டத்தில் சலசலப்பு நிலவி யது. இதனால், இந்தத் தீர்மானம் ஒத்தி  வைக்கப்படுகிறது என்றும், மற்ற தீர்மா னங்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டன என்றும் மேயர் கூறினார்.