கோவை, மார்ச் 11- தையல் கலைஞர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கு, இஎஸ்ஐ மருத்துவக்காப் பீடு வசதியை ஏற்படுத்தி தர வேண் டும் என சிஐடியு தையல் கலைஞர் கள் சங்க பேரவை வலியுறுத்தியுள் ளது. சிஐடியு கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகளிர் தினம் மற்றும் சிறப்பு பேரவை கணபதி சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. கூட்டத்திற்கு சங்கத்தின் பொரு ளாளர் கு.லலிதா தலைமை ஏற்றார். இதில், பி.ஆர்.நடராஜன் எம்பி., சிபிஎம் கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட் டத் தலைவர் கே.மனோகரன், தையல் சங்கத் தலைவர் ஆர்.மனோ கரன் தையல் கலைஞர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.வேலுசாமி உள் ளிட்டோர் பங்கேற்று உரையாற்றி னர். இதில், 2023 - 24 ஆம் ஆண்டிற் கான நலவாரியத்தில் 60 வயது முடிந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசாணையை கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார். இதில், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 16 நல வாரி யங்களிலும் நிதி வரவை உருவாக் கும் வகையில் திட்டங்களை மேற் கொள்ள வேண்டும், அனைத்து வித மான பணப்பயன்களை அனைத்து நலவாரியங்களுக்கும் ஒரே மாதிரி யாக, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். தொழி லாளர் தரப்பு பங்களிப்பை தொழி லாளர்களிடம் பெற்று தொழிலா ளர் சங்கங்கள் மூலமாகவும் நிர் வாக தரப்பு பங்களிப்பை நல வாரி யங்கள் மூலமாகவும் வழங்கி, தமி ழகத்தில் 80 லட்சத்திற்கும் மேற் பட்ட அமைப்புசாரா நலவாரிய உறுப் பினர்களுக்கு இஎஸ்ஐ மருத்து வக்காப்பீடு வசதியை செய்து கொடுக்கிற போது, குடும்பத்திற்கே முழுமையான மருத்துவ சிகிச்சை யும் இதர வசதிகளும் கிடைப்பதன் மூலம் 80 லட்சம் மக்கள் மிகப்பெரும் அளவில் பயனடைவார்கள். எனவே கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு இஎஸ்ஐ மருத் துவக்காப்பீடு வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இக்கூட்டத்தில் பங் கேற்ற 522 பேரிடம் தலா 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்ட ரூ.50 ஆயி ரம் நிதியை, மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியாக பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் வழங்கப்பட்டது.