திருச்சிராப்பள்ளி, ஏப்.25-
கூடுதல் நேரம் பணி யாற்ற கட்டாயப்படுத்தக் கூடாது. கூடுதல் நேரம் பணி யாற்றினால் தான் விடுப்பு என நிர்ப்பந்திக்கக்கூடாது. நியாயமான காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போட்டு தண்டனை வழங்கக் கூடாது. தேவையான தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண் டும். போக்குவரத்துக் கழ கங்களில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண் டும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நிய மிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் (சிஐடியு) செவ்வாய் அன்று அரசுப் போக்குவரத் துக் கழக திருச்சிராப்பள்ளி மண்டலத் தலைமை அலு வலகம் முன் தொழிலாளர் கள் குடும்பத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சீனிவாசன் தலைமை யில் நடைபெற்ற போராட் டத்தில் சம்மேளனத் துணைத் தலைவர் கண்ணன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், சங்கப் பொதுச்செயலாளர் கருணா நிதி, துணைத் தலைவர் சண் முகம், பொருளாளர் சிங்கரா யர் எம்.சண்முகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.