திருச்சிராப்பள்ளி, ஜன.4- மகாராஷ்டிராவில் அதானி நிறுவனத்திற்கு மின்சாரம் விநியோகிக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மகாராஷ்டிராவின் மின் வாரிய ஊழியர்கள் புதன் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். இவர்களுக்கு ஆதர வாகவும், தனியார் மயத்தை கண்டித்தும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி மிளகுப்பாறை யில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். தொழி லாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநிலத் தலைவர் கண்ணன், இன்ஜினியர் சங்க நரசிம்மன், பொறியா ளர் கழக சந்தான கிருஷ் ணன், அண்ணா தொழிற் சங்க அண்ணாதுரை, எம்பி ளாயிஸ் ஃபெடரேஷன் சிவ செல்வம் ஆகியோர் விளக்கி பேசினர். பின்னர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பணியாற்றும் மின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2019-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண் டிய ஊதிய உயர்வு வழங் கப்படாததை கண்டித்தும், 88 ஆயிரம் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண் டும், மின்வாரிய ஊழியர் களின் உரிமைகளை பறிக் கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள் ளது. வேலை நிறுத்தத்தை திட்டமிட்டபடி சிறப்புடன் நடத்துவதற்கு பிரச்சார நட வடிக்கைகளில் ஈடுபட்டுள் ளோம். எனவே தமிழக அரசு மற்றும் மின்வாரியம் உட னடியாக இப்பிரச்சனை களை தீர்க்க முன்வர வேண் டும்’’ என்றார்.