திருச்சிராப்பள்ளி, நவ.11 - திருச்சி மாவட்டம் திருவெள்ளறை ஒன்றி யம் குன்னாகுளம் பகுதியில் விவசாய பாச னத்திற்கான குட்டை உள்ளது. மழைநீர் வாய்க்கால் மூலம் இந்த குட்டையை வந்த டையும். இந்த குட்டையின் மூலம் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், வாய்க்காலை தடுத்து சிறிய பாலம் அமைத்துள்ளது. இத னால் மழைநீர் குட்டைக்கு செல்ல முடி யாமல் சாலைகளில் ஓடுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை யில் தற்போது பெய்து வரும் மழையால், தண்ணீர் வாய்க்கால் வழியாக குட்டைக்கு செல்ல முடியாமல் சாலைகளில் ஓடுகிறது. இதனால் மழைநீர் வீணாவதுடன் சாலை களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளா கின்றனர். வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீரை சேகரிப்ப தோடு, பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.